மதுரை, ஆக. 14: மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வக்கீல் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுதந்திர தினவிழாவை வார்டுகள் தோறும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ெகாண்டாடுவது, வார்டுதோறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.