ஸ்ரீபெரும்புதூர், ஆக.14: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த நல்லூர் புதுநகரை சேர்ந்தவர் குணசேகர் (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதா (30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2வது மகள் நிவேதா (9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்நிலையில் மதியம் நிவேதா, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன், நல்லூர் புதுநகர் ஏரிக்கரையில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, திடீரென சிறுமி, ஏரியில் இறங்கியபோது, தண்ணீரில் மூழ்கினாள். இதை பார்த்தது, மற்ற சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர்.