மீனம்பாக்கம், ஆக. 14: புடவை எம்ராய்டிங்கில் தைத்து மலேசியாவில் இருந்து விமானம் மூலம் ரூ20 லட்சம் தங்க நகைகளை கடத்தி வந்த மலேசிய பெண்ணை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில், சுற்றுலா பயணியாக வந்த மலேசியாவை சேர்ந்த விமலேஸ்வரி (47) என்ற பெண்ணின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது, புத்தம்புதிய 2 தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.