சேலம், ஆக.13: சேலம் சூரமங்கலத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் ரெட்டியூர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி சரண்யா(28). இவர்களுக்கு இரண்டரை வயதில் நிக்ஷதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை, சரண்யா தனது குழந்தை நிக்ஷதாவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர்கள், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும், அவர்களை காணவில்லை.