நாகர்கோவில், ஆக.13 : நாகர்கோவில் அருகே உள்ள கீழ கிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (34). இவர் மீது சுசீந்திரம் அருகே நடந்த மாருதி அடிகளார் கொலை வழக்கு, கோட்டாரில் நடந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் ரவுடி பட்டியலிலும் இருந்து வந்தார். ஜாமீனில் இருந்து வந்த இவர் சமீபத்தில் சென்னை சென்று இருந்தார். நேற்று முன் தினம் காலை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர், நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுரை அருகே ரயில் வரும் போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மதுரை ரயில் நிலையத்தில் டாக்டரை வரவழைத்து பரிசோதனை நடந்தது.