வேப்பூர், ஆக. 13: வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (31). இவரது மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. முருகன் சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி இரவு சங்கீதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.