திருவிடைமருதூர், ஆக. 13: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான மகாலிங்கசுவமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். விழாவில் அம்மன் தனித்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறும். 1936ம் ஆண்டுக்கு பிறகு தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றுபோனது. இந்தாண்டு ஆடிப்பூர அம்மனுக்கு புதிய தேர் செய்ய திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமி உத்தரவிட்டார். அதன்படி பக்தர்களின் நன்கொடையோடு 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூர தேர் புதிதாக செய்யப்பட்டது. தேரின் மொத்த எடை 4 டன்னாகும்.