க.பரமத்தி, ஆக.13: க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி சத்திரம் கடைவீதியில் நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் சத்திரம் கடைவீதிக்கு வந்து பஸ் ஏறி கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதில் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் சத்திரம் கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல்கள், டீ கடைகள் முன் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்களை சிலர் நிறுத்தி விடுகின்றனர்.