தண்டராம்பட்டு, ஆக.7: குடிநீர் தேவைக்காக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 மில்லியன் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. அணையில் தற்போது 94.15 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து தென்பெண்ணையாறு வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவை, நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.