நன்றி குங்குமம் டாக்டர்
ஆயுர் வேதம் இந்திய துணைக் கண்டத்தின் பழமையான மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவானது. ஆயுர்வேதம் என்ற சொல்லானது “வாழ்க்கை அறிவியல்”என்று பொருள்படும். சமஸ்கிருத வார்த்தைகளான “ஆயுஸ்” என்பதற்கு ‘வாழ்க்கை‘ என்றும் ‘வேதா‘ என்பது ‘அறிவியல்‘ என்றும் பொருள் உள்ளன. இவ்விரண்டும் சேர்ந்து வாழ்க்கை பற்றிய அறிவியல் என்று பொருள்படும் வகையில், ‘ஆயுர்வேதம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்ற மருத்துவ முறைகள் போல் அல்லாமல் நோயை நாடாமல் நோயின் காரணத்தைத் தேடி குணமாக்குவதே ஆயுர்வேதத்தின் பலம். ஆயுர்வேத முறையில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கிறது.
ஆயுர்வேதத்தின் நெறிப்படி மனித உடலானது நான்கு அடிப்படைகளைக் கொண்டதாகும். அவை தோசா, தத்து, மலம் மற்றும் அக்னி. ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு பற்றிய அடிப்படைகள், மிகப் பெரிய அளவில் சிறப்பாக அமைந்துள்ளன. இவற்றை “மூலசித்தாந்தம்” என்பார்கள். இவையே, ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்படைகள்.
தோசாதோசா மூன்று முக்கிய பிரிவுகள் கொண்டது. அவை வாதம், பித்தம் மற்றும் கபம். இது மூன்றும் உடலை அழிக்கும் குணமுடையவை. மேலும், உட்சேர்க்கைக்குரிய வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தவும், மாற்றவும் வல்லவை. உடல் முழுவதும் செரிக்கின்ற உணவுகளின் செயல்பாடாகவும் உள்ளது. இது உடலின் கட்டமைப்புக்கு உதவுகிறது. இந்த தோசங்களில் குறைபாடுகள உண்டாவதினால் உடலில் நோய்கள் உண்டாகின்றன.
தாதுதாது என்பது உடலுக்கு உறுதுனையாக இருப்பதாகும். இது உடலில் ஏழு திசு அமைப்புகளாக உள்ளன. அவைகள் ரசம், அக்டா, மம்சா, மெடா, அஸ்தி, மிஜா, சுக்ரா. இவற்றை ரத்தம், சதை, கொழுப்பு, திசுக்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்துக்கள் என அழைப்பார்கள். இந்தத் தாதுக்கள் உடலுக்கு அடிப்படை ஊட்டச்சத்தினை மட்டுமே அளிக்கும். மனநிலை மற்றும் அதன் வளர்ச்சிக்கும் உடல் கட்டமைப்புக்கும் இவை உதவுகின்றன.
மலம்மலம் என்பது உடலின் கழிவுப் பொருட்கள் மற்றும் அழுக்கைக் குறிக்கிறது. இது உடலில் மூன்றாக வெளிப்படுகிறது. மலம், சிறுநீர் மற்றும் வியர்வை என மலத்தை வகைப்படுத்தலாம். உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுப்பொருட்கள் முறையாக வெளியேற்றுவது உடல் நலனுக்கு அத்தியாவசியமாகும். மலத்தில் இரண்டு வகைகள் உண்டு. அவை மலம் மற்றும் கிட்டா. மலம் என்பது உடலில் ஏற்படும் கழிவு, கிட்டா என்பது தாதுவின் கழிவுப்பொருட்களாகும்.
அக்னிஅக்னி உடலின் வளர்சிதை மற்றும் செரிமான செயல்பாடு அனைத்தும் உடலின் உயிரியல் தீயினால் நடப்பவையாகும். அக்னி அடிப்படையாக உடலின் கால்வாய், கல்லீரல் மற்றும் திசு செல்களில் பல்வேறு என்சைம்கள் உள்ளன.
உடல் ஒருங்கிணைப்பு அமைப்புஆயுர் வேதத்தில் வாழ்க்கை உடலின் புத்தி, மனம் மற்றும் ஆன்மா, உணர்வு இவை நான்கும் உடலின் கூட்டு வேலையாகும். வாழும் மனிதன் மூன்றில் ஒன்றாக திரளுதல் (வாதம், பித்தம் மற்றும் கபம்) அடிப்படை திசுக்கள் (ரசம், ரத்தம், மஜ்ஜை, எலும்பு, கொழுப்புதசை, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து)மற்றும் உடலின் கழிவு உற்பத்தியில் சிறுநீர், வியர்வை போன்றவை கழிவுப் பொருட்களாக உள்ளது. இதனால் மொத்த உடலில், உருவாகும் கழிவுகளை வெளியேற்றுவதால் உடலை ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. இந்த உடல் ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் அதன் உட்பொருள்களை வளர்ச்சி மற்றும் அந்த கழிவுகள் செயல்படுத்த முடியும். இது உணவு உட்கொள்வது செரிமானம், உறிஞ்சுதல், ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றம் குறிப்பிடத்தக்க உயிர் (அக்னி) மூலம் உளவியல் இயல் அமைப்புகள் மூலம் நோயை குணப்படுத்தமுடியும்.
பஞ்ச மஹா புத்தாஸ்ஆயுள் வேதத்தின்படி மனித உடலானது பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளைக் கொண்டிருக்கின்றன. அவை பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகும். உடல் நலம் மற்றும் உடல் உறுப்புகளில் இவை உடலின் கட்டமைப்பிற்கு தேவைக்கேற்ப சீரான முறையில் வெவ்வேறு விகிதங்களில் உடலில் அமைந்துள்ளது. உடலின் அணி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியானது உணவு மற்றும் அதன் ஊட்டச்சத்தினை சார்ந்திருக்கின்றன . (எ. கா) நாம் உண்ணும் உணவில் அடிப்படை கூறுகளை கொண்டுள்ளது. இவை உயிர் தீயினால் எரிக்கப்பட்டு பின்பு அவை உடலின் கூறுகளை வளப்படுத்துவதற்கு உதவுகிறது.
தொகுப்பு : இளங்கோ கிருஷ்ணன்