கந்தூரி விழா

சாயல்குடி, ஜூன் 21: நரிப்பையூரில் உள்ள ஐந்து ஏக்கர் கடற்கரை அருகே மகான் காதர் சாகிபு ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இங்கு 11ம் ஆண்டு மதநல்லிணக்க கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மக்பராவில் பச்சை போர்வை, மல்லிகை சரம் போர்த்தப்பட்டு, புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது.

இரவு 7 மணியளவில் தர்கா முன்புறம் விழா கமிட்டியாளர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஒப்பிலான், டி.மாரியூர், நரிப்பையூர், குதிரைமொழி, இருவேலி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு நெய்சோறு வழங்கப்பட்டது.

Related Stories: