திருவாடானை, ஜூன் 21: தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தொண்டியில் இருந்து மதுரைக்கு திருவாடானை காளையார்கோயில் சிவகங்கை வழியாக பல வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இவ்வழியில் அதிகளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது இந்த சாலையின் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக படர்ந்து கிடக்கின்றன. இதனால் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே வாகனம் வரும்போது விலகிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.