மதுரை, ஜூன் 21: ராமேஸ்வரம் ரதவீதிகளில் வாகனங்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி ரதவீதிகள் மக்கள் நலச் சங்க செயலாளர் தில்லை பாக்கியம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரத வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள போலீசுக்கு அதிகாரம் இல்லை. அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.