ஆர்.எஸ்.மங்கலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 21: ஆர்.எஸ்.மங்கலத்தில் நகர பேரூர் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திவாகரன் முன்னிலை வகுத்தார். நகர் செயலாளர் புரோஸ்கான், தென்றல் ஜலீல், வைரவன் அழகேசன் ராஜா, கோடை இடி முகமது உள்பட பலர் கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலத்தை தனித் தாலுகாவாக அறிவித்து பல மாதங்கள் ஆகியும் பணி துவங்காமல் உள்ளது. அதனை உடனே தனித் தாலுகாவாக தொடங்கி செயல்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அறிவிக்கப்படாத மின்தடை உள்ளதை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories: