பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி நகர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தற்போது வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், நடைமுறை படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி மைய பகுதி என்பதால் இதனை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பொருள்களை வாங்கவும் விற்பனை செய்யவும் தினமும் வந்து செல்கின்றனர். அதைபோல், பெரிய அளவில் பொருள்களை வாங்க நயினார்கோவில், போகலூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்வதால் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பரமக்குடி நகர், மேலும், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி உள்ளதால், அதிமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அதனை சமாளிக்க முன்னாள் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து மாற்றம், நோ பார்க்கிங், ஒருவழி சாலை, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரமைப்பு, வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள், சரக்கு வாகனங்கள் நகர் பகுதிகளுக்கு வந்து செல்வது உள்ளிட்ட சில திட்டங்களை பொதுமக்கள், வியாபாரிகள், டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டது.