சி.கே.மங்கலத்தில் மகளிர் காவல் நிலையம் திறப்பு

திருவாடானை, ஜூன் 21: சி.கே.மங்கலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டிடத்தை டிஎஸ்பி திறந்து வைத்தார்.திருவாடானையில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வந்தது. இரண்டு காவல் நிலையங்களும் ஒரே இடத்தில் செயல்பட்டதால் இடநெருக்கடி ஏற்பட்டு போலீசாரும் காவல் நிலையத்திற்கு  விசாரணைக்கு வருபவர்களும் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனியாக கட்டிடம் கட்டவேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதைத்தொடர்ந்து ரூ.35 லட்சத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் சி.கே.மங்கலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அவர், ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவிற்கு திருவாடானை சி.கே.மங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் காவல் நிலைய வளாகத்திற்குள் மரக்கன்றுகளை டிஎஸ்பி விஜயகுமார் நாட்டார். விழாவில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சிராஜ்தீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: