டூவீலர்கள் மோதலில் வாலிபர் பலி

தொண்டி, ஜூன் 20: தொண்டியில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார். தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்(27). நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (30). இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். தப்பி ஓடிய சுரேசை தொண்டி போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: