விழுப்புரம்: மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன் என்று கூறினார்.