சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், இதமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், சில மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. தற்போது, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.