தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், இதமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், சில மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை தருமபுரி, ஈரோடு, சேலம், கடலூர், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: