சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை அமுல் கந்தசாமி(அதிமுக) பேசுகையில் “தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என்றார். இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கடந்த 2016-17ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் தாட்கோ, ஜீவன்தரா திட்டங்களின் கீழ் ஒரு மின் இணைப்பு கூட வழங்கவில்லை.