மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுக நகரமான ஜம்போங்கா நகரில் இருந்து கப்பல் ஒன்று சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் சுமார் 250 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பசிலியான் அருகே சென்றபோது கப்பலின் ஒரு பகுதியில் திடீர் என தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.