கேள்வி நேரத்தின் போது திருவிடை மருதூர் கோவி.செழியன் (திமுக) பேசுகையில், ‘‘திருவிடைமருதூரில் துக்காச்சியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளையும், சிதிலமடைந்துள்ள கல்வெட்டுகளையும் சரி செய்து, நல்லதொரு நாளில் விரைவில் குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “தமிழக அரசால் கடந்த 20ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, 574 கோயில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.