மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை

மாங்காடு: மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூபாய் 31,66,363/-  (ரூபாய் முப்பத்து ஒன்று இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 3 முன்னூற்று அறுபத்து மூன்று மட்டும்) கிடைக்கப்பெற்றது. மேலும் பொன் இனங்கள் 320 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 450 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

மேற்படி உண்டியல் திறப்பில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர். சீனிவாசன், திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி பெ. க. கவெனிதா, செங்கற்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் திரு பி.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர்கள் தலைமையில் துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: