மாங்காடு: மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூபாய் 31,66,363/- (ரூபாய் முப்பத்து ஒன்று இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 3 முன்னூற்று அறுபத்து மூன்று மட்டும்) கிடைக்கப்பெற்றது. மேலும் பொன் இனங்கள் 320 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 450 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.