தந்தை இறந்ததால் விரக்தி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

புழல்: தந்தை இறந்த விரக்தியில், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி, போலீசார்   வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா.  இவரது மகள் கீர்த்தி(20). இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு குற்றவியல் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். இவரது தந்தை சரவணன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதனால், கடும் மன உளைச்சலில் இருந்த   கீர்த்தி,  நேற்று காலை மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில்,   கல்லூரிக்கு இவரை அழைத்துச் செல்லும் நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது, கீர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு,  பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  கீர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தந்தை இறந்த சோகத்தில் இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: