அனைத்துக் கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: அனைத்துக் கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது. வேளாண் பட்ஜெட்டுக்கு வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பருவம் தவறிய மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு 20,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

55,000 ஹெக்டேர் அதிகமாக கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற உடன் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கை மூலம் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.அனைத்து விவசாயிகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாண்டு 119 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இயற்கை வேளாண்மைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல் வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவு தானிய உற்பத்தியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தன்னிறைவு பெறுகிற நிலை இருக்கிறது. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அய்ந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: