கொல்கத்தா: ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கத்துக்கு வந்தார். கொல்கத்தாவில் அவருக்கு நடந்த பாராட்டு முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது, ஜனாதிபதியை ‘தங்க பெண்மணி’ என்று புகழ்ந்தார். அவர் பேசுகையில்,‘‘ இந்தியாவில் பல்வேறு மதத்தினர்,ஜாதியினர், மொழி பேசுபவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதியாக உள்ள நீங்கள் அரசியல் சட்டத்தையும், ஏழை மக்களின் அரசியல் உரிமைகளையும் காக்க வேண்டும். மேலும், பேராபத்து ஏற்படுவதில் இருந்து இதனை நீங்கள் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.