இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு.! ஜடேஜாவுக்கு சம்பள உயர்வு.! புவனேஷ்குமார் பட்டியலில் இருந்து நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான  புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏ ப்ளஸ் பிரிவு

* கேப்டன் ரோஹித் சர்மா

*  விராட் கோலி

*  ஜஸ்பிரித் பூம்ரா

* ரவீந்திர ஜடேஜா

ஏ பிரிவு

* ஹர்த்திக் பாண்ட்யா

* ரவிச்சந்திரன் அஸ்வின்

* முகமது ஷமி

* ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்

* அக்சர் படேல்

பி பிரிவு

*  புஜாரா

* கே.எல்.ராகுல்

* ஷ்ரேயஸ் ஐயர்

* முகமது சிராஜ்

* சூர்யகுமார் யாதவ்

* சுப்மன் கில்

சி பிரிவு

* உமேஷ் யாதவ்

* ஷிகர் தவான்

* ஷர்துல் தாகூர்

* இஷான் கிஷன்

* தீபக் ஹூடா

* யுஸ்வேந்திர சாஹல்

* குல்தீப் யாதவ்

* வாஷிங்டன் சுந்தர்

* சஞ்சு சாம்சன்

* அர்ஷ்தீப் சிங்

* கே.எஸ்.பரத்

ஆகிய வீரர்கள் முறையே நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புவனேஷ்குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் காயத்தில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: