இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ ப்ளஸ் பிரிவு* கேப்டன் ரோஹித் சர்மா* விராட் கோலி * ஜஸ்பிரித் பூம்ரா* ரவீந்திர ஜடேஜாஏ பிரிவு* ஹர்த்திக் பாண்ட்யா* ரவிச்சந்திரன் அஸ்வின்* முகமது ஷமி* ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்* அக்சர் படேல்பி பிரிவு* புஜாரா* கே.எல்.ராகுல்* ஷ்ரேயஸ் ஐயர்* முகமது சிராஜ்* சூர்யகுமார் யாதவ்* சுப்மன் கில்சி பிரிவு* உமேஷ் யாதவ்* ஷிகர் தவான்* ஷர்துல் தாகூர்* இஷான் கிஷன்* தீபக் ஹூடா* யுஸ்வேந்திர சாஹல்* குல்தீப் யாதவ்* வாஷிங்டன் சுந்தர்* சஞ்சு சாம்சன்* அர்ஷ்தீப் சிங்* கே.எஸ்.பரத்ஆகிய வீரர்கள் முறையே நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புவனேஷ்குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் காயத்தில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.