நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நெல்லை, நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி இடையே இரண்டாவது தண்டவாளம் அமைக்கும் பணி முழுமையடைந்துள்ளது. இந்நிலையில் 30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.