திருவையாறு புறவழிச்சாலையை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்: பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முன்னிலையில், தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்கள். அமைச்சர் அவர்கள், ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றியபோது, திருவையாறு புறவழிச்சாலையை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காலத்தில் இப்பணியை அறிவுறுத்தினார்கள்.

மேற்கொள்ள வேண்டுமென்று சாலைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். கோரிக்கையின்போது, மேலும், கடந்த ஆண்டு மானியக் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்ட விபரத்தினை ஆய்வு செய்து ஒவ்வொரு அலகாக அனைத்து தலைமைப் பொறியாளர்களிடம், கோடை காலத்தில் ஆறுகளின் குறுக்கே நிறைவேற்றப்பட வேண்டிய பாலப்பணிகளை உடனடியாக துவக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

நிலஎடுப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிலஎடுப்புப் பணிகள் முடித்த பின்னரே சாலைப்பணிகள் துவக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள சாலைப் பணிகளையும், மேம்பாலம், இரயில்வே மேம்பாலம் போன்றவற்றையும் அதிக கவனம் செலுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி நிர்வாக அனுமதி வழங்கியும் முடிக்கப்படாதப் குறிப்பாக ஆய்வு செய்தார்கள்.

Related Stories: