கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்த நிலையில் 4 மீனவர்களும் விரைவில் தாயகம் வருகின்றனர். மீனவர்கள் கைதின்போது பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புடைய படகு இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கடந்த 12ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை கண்டித்து பல்வேறு தரப்பிலும் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.