ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு: காங்கிரஸ் அறிவிப்பு!

டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து  மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு  மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

அதேநேரம் மேல்முறையீடு செய்யலாம் எனக்கூறி பினை வழங்கியிருந்தது.  இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று, சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த செய்தியை அறிந்து உடனடியாக ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும்சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் தலைவர் கார்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசு அமலாக்கத்துறை இயக்குனரகம், போலீசை அனுப்புகிறது. அரசியல் பேச்சுகள் தொடர்பாக வழக்குகளைப் போடுகிறது. நாங்கள் மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: