சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் அதிகபட்ச விலையாக ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 360 தான். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிதான் தங்கம் விலை சாதனை படைத்து இருந்தது. இந்த சாதனையை கடந்த 18ம் தேதி தங்கம் விலை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,580க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மேலும் புதிய வரலாற்று சாதனையை படைத்தது.

அதாவது, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,540க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: