சென்னை: கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை கூறியுள்ளது. 4 மாவட்டங்களில் இம்மாத இறுதியிலும், மீதமுள்ள 11 மாவட்டங்களில் மே மாத இறுதிக்குள் குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே மாதத்துக்குள் குழுவை நியமிக்காவிடில் அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆஜராக நேரிடும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.