மும்பை: ஐபிஎல் போட்டிகளில் வீரராக இல்லாமல் ஒரு வர்ணணையாளராக (காமன்டேட்டராக) இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் களமிறங்க உள்ளார். ஐபிஎல் தொடருக்கான நட்சத்திர வர்ணணையாளர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஸ்ரீசாந்த் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.