வாஷிங்டன் : அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது இந்தியாவில் புயலை கிளப்பியது. கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாக கூறிய ஹிண்டன்பெர்க் நிறுவனம், இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக வரவு, செலவு கணக்குகளில் மோசடி செய்ததோடு வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.