சென்னை : வேலைதேடும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார் அந்த வீடியோவில் பேசிய அவர்; பட்டதாரிகள், வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணமும் வாங்கிவிட்டு வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் கொடுக்கிறார்கள். நீங்கள் அதனை பெற்றுக்கொண்டு வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட ரயில்வே நிலையத்தில் வேலைக்கு சேர முயற்சிக்கும் போது, இது ஒரு போலி நியமன ஆணை என்று கூறி அங்கு உங்களை கைது செய்துவிடுவார்கள்.