சென்னை: கட்சியிலிருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, ஜே.சி.டி.பிரபாகர் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது. ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்; கட்சியிலிருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.