வாஷிங்டன்: சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோ பிடன் வழங்கினார். அமெரிக்க அரசால் ஒவ்ெவாரு ஆண்டும் தேசிய மனிதநேய விருது வழங்கப்படுகிறது. சிறந்த கலைஞர்கள், புரவலர்கள் மற்றும் குழுக்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும். புதிய தலைமுறையினர் மத்தியில் கலையை ஊக்குவிப்பதற்காக முன்மாதிரியாக செயல்பட்ட நபர்களை அடையாளங் கண்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.