சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் அருகே குண்டலப் புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது; அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது; ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது என அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.