மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று (செவ்வாய்) 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மோதிகிறது.