களக்காடு: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழாவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.