திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 62,938 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,751 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.24 கோடி காணிக்கை செலுத்தினர்.