சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எதுவும் முறைப்படி நடக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக்பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என ஓபிஎஸ் கூறினார். அதிமுக பொதுக்குழு சம்பவத்திற்கு பின் தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். ஈபிஎஸ்க்கு ஆதரவாக விதிகளை மாற்றியமைத்து தேர்தலை அறிவித்துள்ளதாக ஓபிஎஸ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.