பூந்தமல்லி: ராமாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக, ராமாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் இரவு நேரங்களில், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ராமாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.