நேபாள பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்

காத்மாண்டு: நேபாள புதிய பிரதமர் பிரசாண்டா அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புதிய பிரதமராக புஷ்பகமல் பிரசாண்டா பதவி ஏற்றுள்ளார். வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறார். அதன்பின்னர் அவர்  முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இந்தியா வர உள்ளார். அடுத்த மாதம் அவர் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: