புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறையின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் குழு முடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரி கூறுகையில்,‘‘ரஷ்யாவை சேர்ந்த பீனிக்ஸ் என்ற ஹேக்கர்கள் குழுவை சேர்ந்தவர்கள் ஒன்றிய சுகாதார துறையின் இணையதள பக்கத்தை முடக்க முயற்சித்துள்ளனர். மேலும் , அதில் இருந்த நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள்,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை பார்த்துள்ளனர்.