நன்றி குங்குமம் டாக்டர்
செய்முறை: வாணலியில்சிறிது எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்அதே வாணலியை அடுப்பில்வைத்து தீயைக்குறைத்து, சிறிதளவு எண்ணெயில் வேப்பம்பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும். இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன் புளி, வெல்லம், தேங்காய்த் துருவல், பூண்டுப்பல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சுவையான வேப்பம்பூ துவையல் தயார். சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
பலன்கள்: வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வாரத்தில் இருமுறை வேப்பம் பூ உணவில் சேர்த்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மீண்டும் பூச்சிகள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தி வேப்பம்பூ துவையலுக்கு உண்டு.
செம்பருத்திப் பூ ரசம்தேவையான பொருட்கள் :செம்பருத்திப் பூ - 4துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டிதக்காளி - 1மிளகு - 1 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிகடுகு - அரை தேக்கரண்டிமிளகாய் - 1பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.உப்பு - தேவைக்கேற்பஎலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டிஎண்ணெய்/நெய் - 2 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவுகொத்துமல்லி - சிறிதளவுசெய்முறை : செம்பருத்திப் பூவில் உள்ள காம்பு, மகரந்தம் நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்து எடுத்து வைத்துக் கொாள்ளவும். பின்னர், கொதித்த தண்ணீரில் தக்காளி, மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்து சேர்க்கவும். அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி சேர்க்கவும். அது பொங்கி வரும்போது கொத்துமல்லி தூவி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவையான செம்பருத்தி ரசம் தயார்.பலன்கள்: செம்பருத்திப் பூ இதழின் சாறு நீர்ச் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். ரத்த சோகை, இதயநோய் அணுகாமல் தடுக்கும் ஆற்றல் செம்பருத்திப் பூவிற்கு உண்டு. உடல் குளிர்ச்சிக்கு செம்பருத்தி ரசம் நல்ல பலன் தரும்.தொகுப்பு- ஸ்ரீதேவி