மும்பை: மும்பை லால்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்பில், 55 வயது தாயும், அவரது 23 வயது மகளும் வசித்து வந்துள்ளனர். கடந்த ஒரு சில மாதங்களாக தாயின் சகோதரர் பல முறை வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் தாய் வீட்டில் இல்லை என்று கூறி மகள் அனுப்பி விட்டார். சமீபத்தில் வீட்டுக்கு சென்றபோது துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலாசவுக்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் சென்று விசாரித்த போது தனது தாயார் தூங்கிக் கொண்டிருப்பதாக அங்கிருந்த இளம்பெண் கூறினார். போலீசாரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அதிரடியாக உள்ளே சென்றனர்.