சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை : போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்த புத்தேரியைச் சேர்ந்தவர் மனோகர் (62). இவர்,  கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் மாதம் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மனோகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறிவியல் பூர்வமாக உறுதியானது. இதனால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்திராவுக்கு ரூ.5000 அபராதம் விதித்து  போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதத்தை செலுத்த தவறினால், சந்திரா மேலும் 6 ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

Related Stories: